பக்கம்:மேரியின் திருமகன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அவன் ஆண்டையிடம் சென்று சொல்லுங்கள்
ஆவன செய்வான் விருந்துண்போம் என்றார்
ஆண்டவருக்கு அருகில் அமர்வது யாரென்று
வாதிட்டனர் அதைக் கேட்ட ஆண்டவரும்
இடையில் துண்டை எடுத்துக் கட்டினார்
சீடர்களின் காலைக் கழுவினார், துடைத்தார்.
பாவம் இதுவென்று பதறினர் சீடர்
பெரியோன் என்பவன் பிறர்பணியைப் பெறுபவனல்ல
பிறர்க்குப் பணிவிடை புரியும் தாழ்ச்சியே

உறுதியாகச் சொல்லுகிறேன் உங்களில் ஒருவன்
என்னைக் காட்டிக்கொடுப்பான் ஆமென்.
ஐயோகேடு அவன் பிறந்ததே தீதென்றார்
நானோநானோ என நாணி நடுங்கினர்
பதறாத யூதாசும் பதைத்துக் கேட்டான்
சிரித்தபடி அவனைச் சென்றுவரச் சொன்னார்.
அந்தோ சாத்தான் அவனுள் புகுந்தான்
ஆண்டவர் அப்பத்தை எடுத்துப் பிட்டார்.
வாங்கி உண்ணுங்கள் இ.:து என்உடல்
உங்கள் உடலில் கலந்து ஒன்றாவேன் என்றார்
பின்னர் கிண்ணத்தை எடுத்து நன்றி கூறினார்
அனைவரும் அருந்துங்கள் இ.:து என்ரத்தம்
உங்களுக்குப புதிய உடன்படிக்கை என்றார்
நாளைய பொழுது உங்களுக்கு நல்லதல்ல
எதிரிகள் வலுத்திருப்பார் இறைமகனை இழந்திடுவீர்
என்றதும் சீடர்கள் பதைபதைத்தார்
ராயப்பர் என்கையில் வாளுண்டு என்றெழுந்தார்