பக்கம்:மொழியின் வழியே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மொழியும் இசையும்

நான்கைந்து ஆண்டுகளாக இசைக்கலை தமிழகத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்று வருவது கண்கூடு. அக்கலையில் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு பயிலுவோர் தொகையும் நாளுக்கு நாள் பெருமை அடைந்து வருகிறது. இசையை விரும்பிச் சுவைக்கும் சுவைஞர் தொகையும் மிகுதி யடைகின்றது. இசையியல் தெரிந்து அதனைப் பயிற்றும் இசைப் பேராசிரியர்களும், இசைக் கல்லூரிகளும், கழகங்களும் அத்துறையிற் செய்துவரும் பணி அளப்பரியது. இதே வளர்ச்சியும், கலைத் திறனும், சுவை விருப்பும், பழந் தமிழ் நாட்டில் இருந்தன. நாடகம், இசை முதலிய நுண்கவைகளைப் பழந்தமிழர் போற்றிப் பேணிப் பாராட்டிப் பெருவிருப்போடு சுவைத்து வந்த காலம் ஒன்று இருந்தது. இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு, என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது. அதனைத் துணைக்கொண்டு நோக்குங்கால் அவர்தம் உயர்ந்த கலை வாழ்க்கையின் பண்பட்ட நிலையை அளவிடும் கருவியாக அமைகிறது. உயர்ந்த பண்பாடும் வாழ்க்கையும், வாழ்க்கையைச் சூழ்ந்து நிற்கும் கலைகளை அடிப்படையாகக் கொண்டே கருக் கொள்ளத் தொடங்குகின்றன என்பது அறிஞர் துணிபு. பழந் தமிழர் கலைவாழ்க்கை இத்துணிபுடன் சற்றும் முரணாத ஒன்றாக அமைந்திருத்தலை வெளிப்படையாக அறியலாம். இசைக்கு இது இலக்கணம், இது குற்றம் என்ற வகுப்புண்மையைத் தமிழ் நூற்றுணைகொண்டு விளக்க முடியும். பதினொரு வகைப் பாடல் நெறிகளைப் பழந் தமிழர் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு நெறியும் அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/30&oldid=621375" இலிருந்து மீள்விக்கப்பட்டது