இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30. காலந்தோறும் ஏற்பட்ட மாறுதல்கள்
1. உயிர்ஒலி மாற்றங்கள்
அகரம் ச, ஞ, ய அகரத்தோடு வாரா தென்பார் தொல்காப்பியர். ஞமலி, யவனர் எனச் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இவற்றைப் பிற மொழிச் சொற்கள் என்பர்.” பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் அகரம் எகரமாக மாறின என்பர்.
கங்கை-கெங்கை (சோழர் கல்வெட்டு) தண்டம்-தெண்டம் ( , ) வட சொற்களுள் சில இம் மாற்றத்தைப் பெற்றன என்பர்.பி .
கல்-கெல்: களிறு-கெளிறு (சோழர் கல்வெட்டுகள்) ச, ஞ, யக் களைத் தொடரும் அகரம் ஐகாரமாக மாறு
அரசர்-அரைசர் (பல்லவர் கல்வெட்டு) தச்சன்-தைச்சன் (12ஆம் நூற். ): அகரம் இதழ்குவி உயிராகவும் மாறுதல் உண்டு.
fi. C. D. P. பக். 43 2. A History of the Tamil Language—u. 178 3e C. D. P. u. 43