34
பசு-பய்- பச்சில்ை, பய்ங்கிளி
(3) கய்-காய்; பய்-பாய்; வய்-வாய் என்பனவற்றுள் உறழ்வு காணப்படுகிறது. எனவே, பழைய உறழ்வு வடி வங்கள் அய்-ஆய் என்பனவாம்.
(4) அஇ என்பதும், அய் என்பதும் விரவி வரும் என்பர் தொல்காப்பியர்.
நாய்-நாஇ-யி
(5) மெய்வேல் என்பதற்குக் கய் (கை) வேல் என்பதும்,
கய் (கை) வகை என்பதற்குப் பொய்வகை என்பதும் எதுகை களாக அமைகின்றன. -
கய்வேல் களிற்றாெடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.” -குறள்
(6) ஐ என்பதும் அய் என்பதும் வடிவத்தால் வேறுபட் டாலும்.பொருள் மாறுவது இல்லை.
ஐயர்-அய்யர்: பையன்-பய்யன்
(7) தொல்காப்பியர் அ.உ, ஒள ஆகும் என்பர்.
ஒளவை-அவ்வை. தவ்வை; நவ்வி: பவ்வம்: மவ்வல்: வவ்வல் என்பனவும் ஒளகாரத்தின் மாற்று வடிவங்களே.
ஏனைய திராவிட மொழிகளில் அவ் என்பதே ‘அவ்வை’ என்பதன் அடிச் சொல்லாக வழங்குகிறது.
கன் - அவ்வெ: தெலுங்கு - அவ்வ: - பர்ஜி - அவ்வ; கொண்ட-அவெ.
(8) பல்லவர் கல்வெட்டுகளில் அய்ந்தே கால்’, கெய்’ என்னும் வடிவங்கள் வருகின்றன என்பர்.
எனவே, பாண்டும் அய். அவ் வடிவங்கள்ே அடிச் சொற்
களில் இடம் பெற்றுள்ளன எனத் தெரிகிறது. இதல்ை,