பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

10. தெலுங்கில் பிச்காலத்தில் ஆ அம்மா (அந்த அம்மாள்) என்ற சொல், ஆமெ எனத் திரிபு பெற்று வழங்கத் தொடங்கியது என்பர். அதுவே தற்காலத்தில் உயர் திணை ஒருமை வழக்காருக உள்ளது.” .

11. கள் ஈறு முதன் முதலில் அஃறிணையிலேயே இடம் பெற்றது: பிற்காலத்தில் உயர்திணையிலும் பன்மையை உணர்த்த இடம் பெற்றது.

பையன்கள்; மனிதர்கள்; மகளிர்கள்; மகள்கள்

12. னஃகான் ஒற்றுத் தமிழில் ஆண்பாலையும் ளகர ஒற்றும் இகரமும் பெண்பாலையும், ரகர ஒற்றும் அதனேடு சேரும் கள் ஈறும் பலர்பாலையும், கள் பலவின்பாலையும் உணர்த்துகின்றன.

13. கள் பலவின்பால் விகுதியாகும். தொல்காப்பியர் அது பலவறி சொல்லுக்கு வரும் என்று குறிப்பிட்டாரே தவிர வற்புறுத்தவில்லை. சங்க இலக்கியத்திலும் ‘கள்’ மிகவும் அருகியே வழங்கியது.

‘மா விரைந்தனவே-ஐங். 498/2

இதில் மா என்பது கள் பெருமல் வந்துள்ளமையைக் காண்க.8

கள் பெற்று வந்தமைக்கு எடுத்துக்காட்டுகள்:

மாண்புகள் -தொல். 1098/4.

யாண்டுகள் -புறம். 367/4. அரண்கள் -பதி. 44/13.

இயங்கள் -பத். 10|277.

1. D. N. LI. 5

2. D. N. u. 43

3. ‘ பக். கீ8

6