உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 21 -- விளக்கவுரைகளையாற்றி - விழி மூடும் இறுதிநாள் வரையில் - விசையொடிந்து கிடந்த மக்களை கிடந்த மக்களை வீறு கொண்டெழச் செய்திடத் தொண்டாற்றிய தூயவர்களாம் பெரியாரும் அண்ணாவும் நிந்தனையாளர்களா? இந்து மதக் கடவுள்கள் மீது ஆபாச அர்ச்சனைகளை

  1. .வெ.ரா. மழையாகப் பொழிந்தார் என்று 'சண்டே' ஏட்

டில் அந்தக் கட்டுரையாளர் சண்டமாருதம் கிளப்பி இருக்கிறார். - தலை "ஒரு வேசி, தனக்குப் பிறந்த குழந்தையை வீசி எதி வதைப் போல், எதிர்ப்பு ஏற்பட்டது என்பதற்காக - த னுடைய முக்கிய (கொள்கையை அண்ணாதுரை விட்டார்." - இப்படி நண்பர் சோ, 'சண்டே' இதழில் எழுதியிருப் பதில் எந்த விதமான ஆபாசமும் இல்லையாம்! அடடா! எவ்வளவு அருமையான - ஆபாசமற்ற - உவமையைச் சோ அவர்கள் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார். இவர்தான் ஆபாசத்தைப் பற்றி எழுதிடத் தகுதியுள்ளவர் என்று தன் னைக் கருதிக் கொண்டிருக்கிறார். பிரிவினைக் கொள்கையை 1962ல் அண்ணா அவர்கள் கழகப் பொதுக்குழுவைக் கூட்டிக் கை விட்டதைத்தான் 'சோ' இவ்வாறு வர்ணிர்க்கிறார்? வேசித்தனம் செய்து பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள லாம் என்று ஸ்மிருதிகள் அனுமதிப்பதைச் 'சோ' படிக்காத வரல்ல! அந்த ஸ்மிருதிகளையெல்லாம் இப்போது யார் நினை வில் வைத்திருக்கப் போகிறார்கள் என்று அவர் நம்பியிருக் கக் கூடும்! தனது கணவன் இறந்து விட்டாலோ அல்லது புத்திரப்பேறு உண்டு பண்ணத் தகுதியற்று விட்டாலோ புத்திரப்பேற்றை விரும்புகிற ஒரு பெண், பெரியோர்களின் அனுமதியுடன் ருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிச் கொண்டு தன் கணவனது சகோதரனையோ, அல்லது அந்தக் குலத்தில் யாரையோ கூடி மகிழ்ந்து கருத்தரிக்கிற வரையில் குலவிக் கிடக்கலாம் என்று யாக்ஞவல்கியர் கூறுவதாக ஸ்மிருதி கூறுகிறது! இத்தகைய ஆபாசக் களஞ்சியங்களை அடையாளம் காட்டியதற்காகத்தான் பெரியாரையும் அண்ணாவையும் தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்களை யும் “ஆபாச அர்ச்சனை பொழிவோர்" என குற்றம் சாட்டிக்