பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருக்ஷேத்திரக் களத்தின் ரத்தச் சேறு காய்ந்து கருகி, மண்ணோடு மண்ணாய்ப் போய்விட்டது. நரிகளும் கழுகுகளும் குகைகளிலும் வனங்களிலும் அடங்கிவிட்டன. கீறிப் பிளவுபட்ட பூமியில் அக்கினிக் கொதிப்பு அடங்கி, ஊற்றுக்கள் சுரந்தன, கலங்கிய! ஆகாசத்தின் மூட்டம் தெளிந்து, வானம் நிர்மலமாயிற்று. இன்று இந்திரப் பிரஸ்தத்தில் தருமன் ராஜ்யம் மேற்றுக் கொள்கிறான். பிதுர்க்களுக்குக் கடன் செய்து க ண் ணீர் சிந்தியா தருமனுடைய அதே கைகளில் இன்று மகுடாபிஷேக தீர்த்தம் வழிந்தோடியது. அன்று கர்ணனின் காலடியில் உருண்டோடி மண்ணில் புரண்ட கிரீடம் இன்று தருமனின் சிரசில் ஏறியிருந்தது. தருமன் இன்று பாரதத்தின் அரசன். ஏக்சக்கராதிபதி. முடிசூடி 'அமர்ந்திருந்த தருமபுத்திரன் சந்நிதியில் குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும் தங்கள் 'காணிக் கைகளைச் செலுத்தினார்கள். வைரங்கள், ரத்தினங்கள், முத்துக்கள், பட்டு, தந்தம் -என்னவெல்லாமோ குவிந்து கொண்டே இருந்தன. குந்தி புத்திரனை ஆ சீ ர் வ தி த் த ா ள் , கண்ண ன் பாராட்டினான். தம் பியர் ஒவ்வொருவரும் அண்ணன் திருவடியில் வந்தனம் செ லு த் தி ன ர். கடைசியில் அர்ஜுனன் வந்தான். கையில் நாணவிழ்த்த காண்டீபமும் இருந்தது . வந்தவன் வணங்கவில்லை; நின்றான். ""அர்ஜுனா, ஏன் வாடியிருக்கிறாய்? என்று தருமராஜா கேட்டான், ' ' 'அன் று பாசறையில் தாங்கள் பேசியது ஞாபக மிருக்கிறதா?”