பக்கம்:ரமண மகரிஷி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ரமண மகரிஷி


குழந்தை பிறந்தபோது அன்னதாதா சுந்தரமய்யர் தனது இல்லத்திலே இல்லை. கோயில் ஊர்வலப் பணிகளிலே இருந்து அப்போதுதான் வீடு நோக்கி வந்தார். வந்த அந்த வள்ளலை பதிதாகப் பிறந்த வாரிசு அழுது வரவேற்றது. அதைக் கேட்ட தந்தை சுந்தரமய்யர், சிந்தை களி கொண்டு ஏழைமக்களுக்குத் தானம் வழங்கினார்!

வெங்கட்ராமன் மார்கழி மாதத்தில், திங்கட்கிழமை அன்று, சிருஷ்ண பட்சத்தில், துவிதியை திதியில் பிறந்ததைக் கண்டு அய்யர் குடும்பம் பூரித்து மகிழ்ச்சிக் கடலிலே அலைமோதி தத்தளித்தது.

அழுது கொண்டே பிறந்த அந்த ஆண் குழந்தையின் ஒலியைக் கேட்டு, குழந்தையின் பாட்டியான, அதாவது சுந்தரம் அய்யரின் தாயார் மகிழ்ச்சி பெற வேண்டியதற்குப் பதிலாக ஓ.... வென்று அழுதாள்! அவள் ஒருத்திதான் மூலையிலே உட்கார்ந்து முணகி முணகி அழுதாள். ஏன் தெரியுமா?

சுந்தரமய்யருக்கு ஒரு தங்கை! அவளுக்கு ஒரு மகன் அதாவது சுந்தரம் அய்யர் தாயிக்கு அவன் மகள் வயிற்றுப் போனல்லவா? அதனால், பாட்டிக்கு நீண்ட நெடு நாளாய் ஓர் ஆசை! தனது மகள் சுந்தரத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தையைத் தனது மகள் பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். என்பதே அக்கிழவியின் ஆசை!

அதனால், அந்தப் பாட்டி, பூமிநாதப் பெருமானை மட்டுமல்ல எல்லா தெய்வங்களிடமும் முறையிட்டாள். என்ன செய்வது வழக்கறிஞர் சுந்தரம் அய்யருக்கு மீண்டும் ஆண் குழந்தையே பிறந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/14&oldid=1280080" இலிருந்து மீள்விக்கப்பட்டது