பக்கம்:ரமண மகரிஷி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

73



தன்னைக் காணவரும் பக்தர் பெருமக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பகவான் ரமணரிஷி அந்த இடத்தை உடனே மாற்றிக் கொண்டு சத்குரு என்ற குகைக்குப் போய் விட்டார். அங்கேயும் மக்கட் கூட்டம் திரண்டு வந்து கொண்டே இருந்தது.

இந்துக்கள் பண்டிகைகள், திருவண்ணாமலை கோயில் விழாக்கள் அல்லது நகரில் நடைபெறும் வேறு, விழாக்கள், பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில், திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பொதுமக்கள், ரமண மகரிஷி ஆசிரமத்துக்கும் வந்து போவதை ஒரு வழக்கமாக உருவாக்கிக் கொண்டார்கள். அதனாலும் மக்கள் கூட்டம் பெருகி வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/75&oldid=1281219" இலிருந்து மீள்விக்கப்பட்டது