பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூவியது. ‘என்ன காரணம்?’ என்று மற்றவை விசாரித் தன. ஒன்றுமே சொல்லாமல், அந்தக் குரங்கு கரையோரம் சுட்டிக்காட்டியது. ஈரமாக, மிருதுவாக இருந்த அந்தத் தரையில், முயலும் பன்றியும் நடந்த அடையாளங்கள் தெரிந் தன. எல்லாமே குட்டையை நோக்கிச் சென்ற காலடிகள்: ஆனல், திரும்பிய சுவடு எதையுமே தாணுேம் அங்கே ஏதோ ஆப்த்து இருப்பதைக் குரங்குகள் அறிந்தன. உடனே, நந்திரி யாவிடம் தெரிவிக்க முடிவுசெய்தன. நந்திரியா அங்கு வந்தது. காலடிகளைக் கவனித்தது. குட்டையை உற்றும் பார்த்தது. குட்டையின் ஒரத்தில் கரும்பையும், ஆகே போல உயர்ந்து வளர்ந்திருந்த நாணலின் நடுவே கூர்ந்து நோக்கியது. அங்கே, தன் ப்ழைய எதிரியின் நீண்ட தலையை யும் மூக்கையும் கண்டது. ஆம், அதே முதலேதான் அங்கு நாணல் நடுவே தந்திரமாக மறைந்து கொண்டிருந்தது.