பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைக் குரங்குகள் கண்டுபிடித்துவிட்டன என்பது முதலைக்குத் தெரிந்தது. இனியும் ஒளிவதில் பயனில்லை என்று அது வெளியே வந்து பேசியது: குரங்குகளே, நீங்கள் எல்லாரும் எப்படியோ சாகப் போகிறீர்கள். இங்கு நீர் குடிக்க வரும் எல்லா மிருகங்களையும் நான் தின்றுவருகிறேன். அப்படியே உங்களையும் தின்னப் போகிறேன். இங்கே நீர் குடிக்க வராவிட்டாலும், நீங்கள் தாகத்தால் தவித்துச் சாகத் தான் போகிறீர்கள். இன்னும் இரண்டு மாதங்கள் - மழை