பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

வ்வொரு இளைஞனும் தனது எதிர்கால முன்னேற்றத்துக்கான வாழ்க்கையைப் பற்றிக் கம்பீரமாக, துணிவாக எதையும் சிந்திக்க வேண்டும். அவற்றைச் செயற்படுத்தும் ஆற்றலோடு பணியாற்றவேண்டும். அந்த செயற்பாடுகளிலே மனித நேயம் பெருமை பெற வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கான நற்பணிகளாக அவை அமைய வேண்டும். சமுதாய மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுச் சம்பவங்களாக அவை இருக்க வேண்டும்.

காவியுடை மாவீரத் துறவி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்குச் சென்றிருந்த போது, அவரது சொற்பொழிவுக்கான சில குறிப்புக்களை எடுக்க அங்குள்ள நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகத்தின் பெயரை நூலகரிடம் கூறி எடுத்துத் துருமாறு கேட்டார்.

நூலகர் அதனைத் தேடிப் பார்த்து அது கிடைக்காததால், ‘நாளை தேடித் தருகிறேன் வாருங்கள் சுவாமி’ என்றார் நூலகர். ‘முயற்சி திருவினயாக்கும்’ என்பதற்கேற்ப, மறுநாள் அவர் நூலகம் சென்றபோது, நூலகர் அரும்பாடுபட்டுத் தான் தேடிய நூலைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.

நூலைப் பெற்ற மகான், அதைச் சில நிமிடங்கள் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து விட்டு, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நூலகருக்கு நன்றி கூறிப் புறப்பட்டார் அவர்.