பக்கம்:லியோ டால்ஸ்டாய்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45 பிரச்சினையே அதுதான். பஞ்ச நிவாரண வேலை யில் அவள் எனக்கு உதவினதையோ, கிறிஸ்தவ மதத்திலிருந்து என்னை லைநாட் (Synod) தள்ளி வச்சபோது அவள் துடித்த துடிப்பையோ என்னால மறக்கவே முடியாது. அதோடு நான் காதலித்து மனைவியானவள். பாவம். தான் பெற்ற பிள்ளைகள் வசதியா வாழனும்னு ஆசைப்பட்டு என்கிட்ட சண்டைக்கு வர்றவள். அதிலென்ன தப்பு. அலெக்ஸ் : அப்பா. இப்போது டால்ஸ்டாயிஸம், டால்ஸ் டாய் என்கிற விதையில ஒரு பெரிய ஆலமர மாயிட்டுது. இப்போ மரம்தான் முக்கியமே தவிர விதையல்ல. ஏன்னா அந்த மரத்துலே எத்தனையோ விதைகளை உள்ளடக்கிய பழங்கள் இருக்கு. ஜார் காக்காயும் குருவியும் கொத்தி நாசப்படுத்தினாலும், இன்னும் நல்ல பழங்கள் பழுதுபடாமல் இருக்கு. கிறிஸ்தவ மதத்தில் இருந்த பத்து கட்டளைகளைச் சுருக்கி, கோபப்படாதே.ஆசைப்படாதே-பிரமாணம் செய்யாதே தீமையை எதிர்க்காதே-எதிரியையும் நேசி என்று எப்போது டால்ஸ்டாய் சொன்னாரோ, அப்போதே டால்ஸ்டாயிஸம் பிறந்துட்டுது. என்றைக்கு சர்ச் உங்களை விலக்கி வச்சுதோ அன்றைக்கே அந்த இஸ்ம் நடக்கத் துவங்கிட்டுது... நடக்கத் துவங்கின டால்ஸ்டாயிஸத்தை ஒட வச்சிடாதீங்கப்பா. ‘இயேசுவை தெய்வமாய்ப் பார்க்காமல் சிறந்த மனிதனாய்ப் பாருங்கள்’ என்று சொல்லி நீங்களே ஒரு இயேசு ஆயிட்டீங்க. சொத்துரிமை தீமை என்று சொல்லி