பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 53 கமலே (கோபத்தோடு) அடே தேவிடியா மகனே. அவனேத் தொடாதேங்கிறேன். போட்டு இளுக்கிறீயா? அவன் மேலே இன்னமேக் கை போட்டீன்னா ஒன் முதுகு தோலைப் பேத்துடு வேன். சாக்கிரதே! அடியாத்தே ஆருன்னு ரோசனை பண்ணிக் கிட்டே? (முண்டன் மகிபாலனுடைய முக்கின் அடிக்க இரத்தம் வடி கிறது. அதைக் கண்ட மகிபாலன் சோர்ந்து கீழே விழுகிறான்.) கமலே இதோ பாருடா ஒரே ஒதலே ஒன் தலை கிலேல் லாம் எகிரிப் போவுது முண்டனை அடிக்கப் போகிறான்.) முண் வாடா ஒரு கை பார்க்கலாம். ஒம் பொஞ்சாதி புள்ளெங்களுக்கு ஒரு எலும்புகூட இல்லாமெப் பண்ணிப் புட்றேன். (அடிக்கிறான்./ - கமலே ஆகா! அப்படியா ராசவீதிலே பட்டப் பகல்லே நீ என்னே அடிக்கிறியா? ஒருத்தரும் ஒன்னெக்கேக்றவங்க இல் லேன்னு நெனச்சுட்டியா? இப்பவே ஒங்க பாட்டன் ஒங்கம்மா புருசன் நாயாதபிதி இக்கிறான் பாரு அவன் கிட்டப் போயிச் சொல்லி ஒன்னே எங்கிட்டுப் பாக்கனுமோ அங்கிட்டுப் பார்க் கறேன். பயப்படாதே! . முண் அடே இந்தப் பூச்சிக்கெல்லாம் இந்த முண்டன் பயந்துடுவான்னு நெனெச்சிக் கிட்டியாடா? கையாலே ஆவாத முண்டே இப்பவே போயி சொல்லிக் கோடா! நானும் ஒன்னெப் பாக்கறேண்டா எனக்கும் சாமி குடுத்த கண்ணு இக்குதுடா! கமலே நீயுமா பாக்கப் போறே? அடே எப்புடிடா பாப்பே? அந்த அளவெக் கொஞ்சூண்டு காட்டுறா பார்க்கலாம். முண் : இப்படித் தாண்டா பாப்பேன் (முண்டன் தன் கண்களை நன்றாய்த் திறந்து கொண்டு முகத்தை நீட்டுகிறான்.) கமலே இந்தா நல்லாப் பாருடா (கமலேசன் ஒரு பிடி மண்ணை எடுத்து முண்டன் கண்களில் போட்டு விடுகிறான். அவன் கண்களை மூடிக்கொண்டு தவிக்கிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/55&oldid=887594" இலிருந்து மீள்விக்கப்பட்டது