பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வஞ்சி முதுரர் இஃது இயற்கை முறை. இவ்வியற்கைக்கு மாறாகச் சென்றால் எண்ணற்ற துயர்வுற வேண்டும். இந்த உண்மை களைச் செல்வம் படைத்தோர் உணர்தல் வேண்டும். அவர்கள் உணர்ந்து விட்டால், உலகிற்குக் கேடே இல்ல்ை யாம், ஆனால், திருவினை உடையராகிய அவர்கள் தெள்ளி யரல்லர். அதனால் அதை உணர முடியவில்லை. இந்நிலை யில் அறியாத அவர்க்கு அறிவூட்டும் நல்லோர் நாட்டிற்குத் தேவை. அந்நல்லோர் கூறும் அறிவுரையே, நாட்டிற்கு உண்டாகும் கேடுகளைப் போக்க வல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/98&oldid=889048" இலிருந்து மீள்விக்கப்பட்டது