இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்புப் படையல்
திருவரங்கம் தனித்துயிலும் பெரியபெரு மாளின்
திருவருள்போல் மிகவுயர்ந்து, சடகோட ரிசைத்த
பெருவரங்கள் தருகின்ற நம்திருவாய் மொழிபோல்
பீடுற்று, யதிராஜன் பாஷியம்போல் ஓங்கிக்,
குருவரங்கள் படர்கின்ற பெருந்தம்ப மாகிக்
குலவுபெருங் கோபுரத்தை அரங்கத்தே வளர்க்கும்
ஒருவருங்கொள் ளாச்சீரைப் பணிவுடனே தாங்கி
உருக்கங்கொள் அழகியசிங் கருக்கிந்நூல் உரித்தே.