பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.證彎。 11. X சொக்கலிங்கர் முருகப்பர் செட்டி நாட்டார் சுடர்விட்ட புரட்சித்தி கம்பன் தாசர் தக்கவரின் திருநினைவால் மலரும் இந்நூல் தகைசான்ற அவர்துணைவி புரட்சி அவ்வை மதிக்கவுயர் பாசவல்லி மரக தம்மா மேலான திருக்கையில் கொண்டாய்ச் சேரும்; தக்கபடி நன்றியினைச் செலுத்தும் எங்கள் தமிழாசான் உயர்பண்பு தொடர்க! வாழ்க! எண்பதினை நெருங்குகிற என்றன் ஆசான் இருபதுபோல் உடல்பெறுக! நூறும் காண்க: கண்படைத்த பேரதனைத் தமிழர் நாட்டார் களிபடைத்த அவர்நூலின் படிப்பால் காண்க! விண்துடைத்த வேங்கடமும் அதன்மேல் தோன்றும் விரிசுடரும் ஆசானைப் படிப்போர் கேட்போர் மண்படைத்த உயிர்களினை அருளிக் காக்க மானுடத்தின் வெற்றி யென்றும் வாழ்க! வாழ்க! "தமிழகம்' Y வ. உ. சி. தெரு } கண்டனூர்-623 104 } பசும்ப்ொன் தேவர் # அர. சிங்காரவடிவேலன் மாவட்டம் ! 35-05-1993