பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) 参 என்று அடிக்கடிக் கூறுவதே ஒரு மரபாகிவிட்டது. இதைத் தெளிவாக உணர வேண்டுமாயின், வேங்க டத்தைப்பற்றி இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் இடங் களைக் கூர்ந்து நோக்கிப் பொருள் காண்டல் வேண்டும். ஒருவர் வடக்கிலுள்ள வேங்கடத்தைக் கடந்து சென்றால் அப்பகுதிகளில் மக்கள் பேசும் மொழி முற்றிலும் வேறு பட்டிருக்கும் என்ற போக்கிலேயே அவ்விடங்கள் குறிப் பிடப்பெற்றிருப்பதை அறியலாம். சங்க இலக்கியங்களில் * மொழி பெயர் தேஎம் (எ.டு. குறுந் 11, ஐங்குறு-321: அகம்-67 முதலியவை காண்க) என்ற தொடர் எங்கனும் பெருவழக்காக ஆளப்பெற்றிருப்பதினின்றும் இதனைத் தெளியலாம். ஆகவே, அக்காலத்தில் தமிழர்கட்கு நன்கு பழக்கமுடைய திருப்பதி மலையையே வேங்கடம்" என்ற பெயரால் குறித்தனர் என்று கருதலாம். இது நாளடை வில் கிட்டத்தட்ட ஒர் எல்லைக் குறியாகவே (Land Mark) அமைந்துவிட்டது. இதனைக் கடந்து அப்பாற் சென் றால் அங்கு மக்களிடம் தமிழ் பேச்சு வழக்கில் இல்லாததை அறியலாம்.” பிறிதோர் இடத்தில் அப் பேராசிரியர் தமது இதே நூலில் வட எல்லையின் மிக முக்கியமான எல்லைக் குறியாக இருப்பது வேங்கடம்" என்பதற்கு ஐயமில்லை' என்பதாகக் கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கது." பேராசிரியர் அய்யங்கார் அவர்களின் தவறான ஊகம் : பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் மேற்குறிப்பிட்ட வேங்கடத்தின் வருணனையைச் சங்க காலத்து வேங்கடத்தைக் குறிப்ப தாகவே கொண்டுள்ளார்கள். ஆயினும் அவர், 2. A History of Tirupati-pp. 4,5 Part 3. டிெ-p. 7