பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

213

“யாரு அப்படிச் செய்தது? வீண் வம்பு? நந்தசுவாமி இல்லையா?”

“அவங்க இருக்காங்க.இந்தப் பூவன், குழலுாதும் மாதுலன் எல்லாம் அங்கே தான் இருக்கிறாங்க.”

“நந்தசுவாமி குதிரையைக் கட்டிப்போடச் சொன்னாரா?” புரியவில்லை. ராசா வந்திருப்பது மெய்தான். இந்த மூடு நாடகம் எத்தனை நாள் நடக்கும்?

“அஜயா, விஜயா, எல்லோரும் போய் குதிரையை அவிழ்த்து விடுங்கள். அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்! நமக்கெதற்கு'அஜயனும் விஜயனும் மேனியில் படிந்த கதிர்களை, தொத்தும் வைக்கோல் துகள்களைத் தட்டிக் கொள்கிறார்கள். வாதுமை நிற மேனி கறுத்து மின்னுகிறது. அஜயனுக்கு விஜயன் சிறிது குட்டை முக வடிவம் ஒரே மாதிரி, அவள் நாயகனை நினைவுபடுத்தும் விழிகள் முகவாய் காதுகள்.

நெஞ்சை யாரோ முறுக்கிப் பிழிவது போல் தோன்றுகிறது. ஆனால், பிள்ளைகளே, நீங்கள் உயர்ந்த தருமத்தில் வாழ்கிறீர்கள்: பிறர் உழைப்பில் ஆட்சி புரியவில்லை!

“அம்மா! நந்த சுவாமியே எங்களை இங்கே அனுப்பி வைத்தார். அரசகுமாரர் யாரோ வந்திருப்பதாகச் செய்தி வந்ததாம். அவர்கள் வந்தால் கட்டிப் போட்ட குதிரையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அங்கேயே காவல் இருக்கிறார். மாதுலன் குழலூத, அது சுகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது.”

“யாரிடமும் வில் அம்பு இல்லையே?”

“நாங்கள் குருசுவாமி சொல்லாமல் தொடுவோமா?”

அப்போது, சங்கொலி செவிகளில் விழுகிறது; பறையோசை கேட்கிறது. எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்.

“ராசா. பிள்ளைங்களா! தானியத்தைக் கூடையில் அள்ளுங்க!” எல்லோரும் விரைவாகக் கூடைகளில் அள்ளு-