பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டு விளங்கிற்று அந்த முன்னைக்குலம்
மேலும் மிருக வடிவிலிருந்து மேம்பட்டு
மனமென்னும் உணர்வு கொண்ட மாற்றமே
மனிதனாக்கிற்று லெமூரியன் ஆனான்
அவனே மனுக்குலத்துக்கு மூதாதை
தமிழ்க் குலத்துக்குத் தந்தை என்று தலை நிமிர்கின்றேன்.
யூதேயா நாட்டு ஏதேன் பூங்காவில்
ஆதாம் என்றவனை ஆண்டவன் படைத்தான்
அவன் எலும்பிலிருந்தே பெண்ணும் பிறந்தாள்
என்பது உயிரியல் இலக்கணத்துக்கு புறம்பானது
அறிவில் வளர்ந்து வடிவிலும் படிப்படியே
குரங்கிலிருந்து மனிதன் ஆன கொள்கையே வலியது
ஆக மனுக்குலத்தின் தலைமகன் லெமூரியன்.
லெமூரியனைக் கொண்டு பெயர் கொண்டதே லெமூரியா
அந்த ஆதிமனிதனுக்குத் தொட்டில்
மூன்றாவது ஊழியில் மூழ்கிய நம்தென் புலமே