பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குமரிக்கண்டம்


பூசம் முதலாக புளர்ப் பூசம் ஈறாக
எண்ணுகின்ற இருபத்தேழு நட்சத்திரங்களும்
சூரிய சந்திரரை உள்ளிட்டு சனிவரை
சொல்லுகின்ற ஏழு கோள்களும்
சுழன்று கொண்டு இருப்பதே இந்த பேரண்டம்
சூரியனிலிருந்து புறப்படும் சுடரொளி
பூமியை வந்து தொட ஐநூற்று வினாடி
வினாடிக்கு அதன்வேகம் லட்சத்து எண்பத்து
ஆறாயிரம் மைல் என்று அறுதியிட்டார்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிட்ட தூரமோ
கோடியில் ஒன்பதும் லட்சத்தில் முப்பதும்
சுருதிகள் சொல்லுகின்ற சுழலும் கணக்கிற்கு
சூரிய சந்திர கிரகணமே சான்று
புவிக்குரிய அச்சின் மேலுச்சியை
வானியலார் மேருஎன்று வழங்கினார்
நிலவியலார் வடதுருவம் என்று சொன்னார்
புராணகாரர் இமயத்தை மேருவென்று எழுதிக்கொண்டார்
சுற்றுகின்ற வேகத்தில் பம்பரத்தின் மேல் உச்சி
தலை சாய்ந்து வரும் அதுபோலே
பூமியும் சுழன்று வரும் வேகத்தில்
தலை உச்சி கொம்பு சுற்றி வரும்
அதனையே கதிபேத மென்று கணக்கிடுவார்
கதிரவன் இழுத்துப் பிடிக்கும் ஆற்றலினால்
புவியோட்டத்தின் தூரமும் மாறுபடும்

12