பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலையத்துவஜன் என்று வழங்கிய படி
கடல் அலையெனக் கொடியசைந்து வர
படை நடத்திய பப்பரவாக னனை
சாகாத்துவஜன் என்று சாற்றினார்
பதிற்றுப்பத்து பாராட்டிய பேராற்றலுடையோன்
வாளில் வலியோன் வள்ளியரில் வள்ளியோன்
தென்புலத்து அக்குரன் வடபுலத்து நூற்றுவர்க்கு
துணை போனான் என்று சங்கத் தமிழுரைக்கும்
வடக்கும் தெற்கும் நெருங்கி நெருங்கி
உறவும் பகையும் கொண்டதற்குச் சான்றுகள்
இதிகாச புராணங்களில் எத்தனையோ உண்டு

53