பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வர்ணாஸ்ரமம்


அளவு கசப்பு வளர்ந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் கண்டனத்தோடு நின்று விடாமல், நோய் போக எம்மருந்து உட்கொள்வதென்றுரைக்கும் நேர்மையும் நெஞ்சழுத்தமும், அந்தப் படிப்பாளிகட்கு இல்லையோ என்று அஞ்சவேண்டி இருக்கிறது. சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சாடினார், சர்ச்சிலுக்குச் சூடெழ, அமெரிக்கு அழுகை கிளம்பக் கூடிய விதத்திலே!"தன் மானம் உண்டு எனக்கு ! எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலே நமக்கிருக்கும் அந்தஸ்த்துக் குறித்து மகிழ முடியாது. நான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் புகழ் பாடமுடியாது. எந்த ஆப்பிரிக்க மண்ணிலே என் இனத்தவரின் இரத்தம், போரிலே சிந்தப்படுகிறதோ, அதே ஆப்பிரிக்காவிலேயே அவர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு லாலி பாட மனம்வருமோ! மனம் முறிந்து விட்டது அன்பர்களே!' என்று சர் சண்முகம் கூறியிருப்பதுகேட்டு, அறிவும் தன் மானமும் உள்ள எவர்தான், 'சபாஷ்!' என்று கூறார் ? ஆனால், இந்தப் பகுதி எனக்குப் புள காங்கித மூட்டவில்லை. ஏனெனில், கண்ணியத்துடனும் காரணத்துடனும், கம்பீரமாகச் சர் சண்முகம், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் போக்கைக் கண்டித்தார். ஆனால், இதனினும் கடுமையாகவும், நரகல்நடையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தின் போக்கைக் கண்டிக்கத் தேசீயத் திருக்கூட்டத்திலே பலருண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தைச் சின்னாபின்னமாக்குவேன் என்று சினந்து சூள் உரைத்தோரையும், அதன் பிடரியைப் பிடித்துக் குலுக்குவேன் என்று முழக்க மிட்டோரை-