பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வர்ணாஸ்ரமம்


தலைக்கு விரோதிகளாக உள்ளவர்களை "சற்றே விலகு" என்று கூறும் ஆண்மையாளர் மிகக் குறைவு.

சர் சண்முகத்தின் பேருரையிலே, ஆண்மை ததும்புகிறது; அதனைக் கண்டே நான் களிப்படைகிறேன். "நம்மை ஆளும் அயல்நாட்டாரின் வாக்குறுதிகளினாலோ, நல்ல எண்ணத்தினாலோ, நாட்டு விடுதலை கிடைத்துவிடுமா? கிடைத்து விடாது!" என்று கூறுகிறார் சர் சண்முகம். சுதந்தரம் சீமையிலே தயாரிக்கப்படும். சரக்கல்ல, சன்மானமாகப்பெற! அது, நாட்டுமக்களின் நாடிமுறுக்கினால் விளையக்கூடிய நிலை. அதனை இங்கேயே தான் பயிரிடமுடியும். ஆனால், அந்த வயலிலே, கள்ளிபடர்ந்திருக்கிறது. அதனைக் களையா முன்னம்,பயிர் இல்லை,பண்பு இல்லை, நாட்டு நலிவு போக்கும் பச்சிலை இல்லை. இதனை சர் சண்முகம் அஞ்சா நெஞ்சுடன் அறைவது கேண்மின்.

"இந்நாட்டிலே, அதிர்ப்தியும் துவேஷமும் அதிகரித்துளது. இது வருந்தத் தக்கது. ஆனால், இதற்குக் காரணம் என்ன ? இங்கு ஒரு கூட்டம், தனது நோக்கமும் கலையுமே பிரதானமென்று கூறி, மற்ற மக்கள்மீது அவைகளைத் திணித்தது. அதன் பலனாகவே கேடு பல தோன்றின. தேசீயத்தின் பெயரால் அக்கூட்டம். மற்றவர்களை அடக்கித் தன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது."

இந்தப் பொன் மொழியை ஆராய்ந்து பாருங்கள் இந்த உபகண்டத்தின் வரலாறுகளிலே புதைந்து கிடக்கும் உண்மைகளை உணருங்கள். அந்த ஒரு கூட்டத்தின் செருக்கு எவ்வளவு! அது அழித்த அரசுகள் எத்தனை ! அதன் வயப்பட்டு அழிந்த வீரர்கள் எவ்-