பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67° வல்விக்கண்ணனின் மணியான கதைகள் அறியாமையையும் அனுபவமின்மையையும் எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டான். "சண்டையிலே உன் சேவல் வேலு மட்டும் ஜெயித்திருந்ததுன்னு சொன்னால், நாம இப்படி சந்தோஷமாக இருக்க முடியுமா? எங்க ஐயா வர்மம் வச்சுக் கிட்டு ஏதாவது செய்யத் திட்டம் போட்டிருப்பாரே. அதனாலேதான் நான் ஒரு வேலை செய்தேன்” என்றாள் செல்லம். . 'மத்திரம், சூனியம் என்கிறார்களே, அது மாதிரி ஏதாவது செய்தியாக்கும்!” என்று அவன் விசாரித்தான். "தொழுவத்திலே உன் சேவல் இருந்த இடத்திலே பெட்டைக் கோழியைக் கொண்டு விட்டேன்" என்று கூறி குறும்புச் சிரிப்புச் சிரித்தாள். క్ష్వి .