தேனமுதத் திருப்பாட்டு 37
கவிஞர் பலருள் சுந்தரரும் ஒருவர். அவர் இறைவல்ை தடுத்தாட்கொள்ளப் பெற்ற தனிப்பெருமை உடைய வர். தம்பிரான் தோழரெனத் தலைக்கொண்டு போற்றும் தகுதியுற்றவர். வன்ருெண்டர் என்று இறைவனுலேயே வாயார வாழ்த்தப் பெற்றவர் பித்தன்' என்று தொடங்கி, என்னேப் பாடுக!
அர்ச்சனை பாட்டே ஆகும் , ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக !’
என்று சிவபெருமானே தன்னைப் பாடுமாறு அருள் செய்யச், சிங்தைக்கு இனிக்கும் செக்தமிழ்ப் பாக்களைப் பாடியருளியவர் சுந்தரர். இவர் ஒருகால் தில்லைப் பொன்னம்பலத்தின் முன்னர் கின்று, பண்ணுென்ற இன்னிசைப் பாடல் பாடிய காலத்துத் தில்லைக்கூத் தன் செயல்மறந்து அவரது பாவிலே மூழ்கிவிட்டார். சேரமான் பெருமாளுக்கு வழக்கமாக நாள்தோறும் கேட்பித்தருளும் சிலம்பொலியைக் காட்டாது சிந்தை சொக்கிவிட்டார் என்று சேக்கிழார் கூறுவார்.
இத்தகைய தெய்வத் திருவருட் கவிஞராகிய சுந்தரருடைய செந்தமிழ்ப் பாக்களே அருட்பிரகாச வள்ளலார் நாள்தோறும் ஒதியோதி இன்புற்ருள். இறைவனேயே சொக்கவைத்த சுந்தரப் பாடல், இராம லிங்கரின் இதயத்தை என்னபாடு படுத்தியிருக்கும்! அதனே நம்மால் வில முடியுமா? அப்பெருமானே தமது அனுபவத்தை அழகுற ஒரு திருப்பாட்டில் குறிப்பிடுகிரு.ர்.
அவர் சுந்தரரது செக்தமிழ்த் தேவாரத் திருப் பாட்டுக்களே நாள்தோறும் ஒதும்போதெல்லாம் தம்மை மறந்தார். அவருடைய காக்குமட்டும் அவ்