பக்கம்:வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. ஆடுகளமும் ஆடரங்கமும்

ஆயிரக் கணக்கானோர் ஒடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்ட வள்ளுவர், இது என்ன ஒட்டம் என்று ஆச்சரித்துடன் கேட்டார்.

இது ஒரு ஒட்டப் போட்டி, நீண்ட தூரம். ஓடுகிற போட்டி, ஆண்களும் பெண்களுமாக, தங்கள் உடல் திறனை பிறருக்கு வெளிப்படுத்தி, வெற்றி ஈட்டும் பொருட்டு, இப்படிப்பட்டப் போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம். என்றேன்.

இதன் முடிவு எப்படியிருக்கும் என்றார்.

ஒட்டத்தில் முதலாவதாக வருகிறவர் வெற்றி யாளர் ஆகிறார். அவருக்குப் பரிசும் பாராட்டும்

கிடைக்கும் என்றேன்.

இந்தப் போட்டியின் அடிப்படை நோக்கம் என்ன என்றார்.