வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 15s
யெல்லாம், போர், போர்க்களம், போர்ச் செயல்கள், போர்ப் பண்பாடுகள். இவற்றிலிருந்து எடுத்துத்தான் கையாண்டிருக்கிறார். . .
வீரமான கருத்துக்களும் வீரமான உவமை களும் குறளில் நிறைந்து விளங்குவதால்தான், குறளில் உணர்ச்சிகள் கூடிக் கிடக்கின்றன. - --
- .
3.
அந்தக் குறளிலே உயிர் இருக்கிறது. உயிர்ப்பு இருக்கிறது. உவப்பு இருக்கிறது. உண்மை இருக் கிறது. அதிலே உலகமே இருக்கிறது.
இதுவரை வள்ளுவரை ஆய்ந்தவர்கள் எல்லாம், அவர் கருத்தில் தோய்ந்தவர்கள் எல்லாம், வள்ளுவரை ஞானியாகப் பார்த்தனர். மதப் பண்பாடு மிக்க மேலோராகப் பார்த்தனர். *
ஆனால், நான் வள்ளுவரை வீரராகப் பார்த் தேன். விவேகியாகப் பார்த்தேன். சான்றோராகப் பார்த்தேன்.
போர் நிகழ்ச்சிகள்தான் விளையாட்டு நிகழச்சி களாகப் பிறந்திருக்கின்றன. அன்று போர் வீரர்கள்
கொண்ட கோலத்தை, செய்த செயல்களைத்தான், இன்று விளையாட்டு வீரர்களும் செய்கிறார்கள்.
ஆனால், சிறுமாற்றம்.
வள்ளுவர்-10