பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 21

சூதாடாதே! பொய் சொல்லாதே! புலால் உண் ணாதே! கள் குடியாதே! களவு செய்யாதே! வஞ்சகம் கொள்ளாதே தீயன எண்ணாதே! இது ஒரு தொகுப்பு.

'நட்புத் தேவை; அதை ஆராய்ந்து கொள்! தீயவர் உறவை நோயென விலக்கு! பெரியோரைத் துணைக் கொள்! பிறரோடும் அன்பாயிரு! மனைவியை மதி: மக்களைப் பெறு! அறிவை அடை! சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்! செய்வதெல்லாம் திறமையாக இருக்கட்டும்! அறத்தின் வழி நின்று பொருளைத் தேடி இன்பத்தைப் பெறு! வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும்' என்பதே. இவைதான் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் நீங்கள் திருக்குறளில் பார்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு, எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினர்க்கு, எ ந் த ச் சமயத்தினருக்கு வேறுபாடு உடையது? இராது: அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர். திருவள்ளுவரைப்பற்றி இதுவரை சொல்லியது போதும் என்று நினைக்கிறேன். விட்டுவிடுகிறேன்.

அடுத்து திருக்குறள். பொது நோக்காகத் திருக்குற ளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு? உலகில் தோன்றிய நூல்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை மூன்று நூல்கள்தான். முதல் வரிசையில் இருப்பது பைபிள். ஏறக்குறைய 500-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது அடுத்த வரிசையிலே இ ரு ப் ப து திருக்குறளின் இஸ்லாமிய வேதம். குரான். 200-க்கு சிறப்பு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசையிலே இருப்பது திருக்குறள். 80-க்கு :மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டும் சமய நூல் என்று ஒதுக்கி வைத்துவிட்டால், உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்