பக்கம்:வள்ளுவர் இல்லம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வள்ளுவர் இல்லம்

என்ற புகழ்மாலை வீட்டில்! வாங்கிய கடனைக் கொடுக்க வழியற்றவன் என்ற இகழ்மாலை நாட்டில் செலவானது வரவுக்கு மேற்படாமல் உட்பட்டிருக்குமானல் குறைந்த வருவாயினால் தாழ்வு ஒன்றும் இல்லை - என்னும் கருத்தில், “ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை போகு ஆறு அகலாக் கடை” எனத் திருவள்ளுவரே தெரிவித்துள்ளார் மற்றோரிடத்தில். எனவே நூறு காசு ஈட்டி மேலும் பத்துக் காசு கடன் வாங்குபவனைக் காட்டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப் படுத்துபவனே மேலானவன் என்ற மந்திரத்தை மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத் துணை யாவாள். இது குறித்தே தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ என்றார் ஆசிரியர். ஆகவே மனைவி ஆடம்பரச் செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்த வேண்டும்.

இங்கே இன்னொன்றும் கவனிக்கவேண்டும். கருமித் தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத்தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வரு வாயானால் சிக்கனமாயிருக்க வேண்டும். நிறைந்த வரு வாயானால் கூடிய வரை பிறருக்கு உதவியும் செய்யலாம். இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும் சொல்லலாம்; அதாவது, கணவனது செல்வமாக இருக்கத் தக்கவள் - இவளே கணவனுக்குப் பெரிய செல்வ வளம் - என்ற அழகு உரைதான் அது!