பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

யின்றி உறங்குகிறான். இதற்கு மாறாக ஒரு செல்வச் சீமானின் மாடி வீடு, பொன் வெள்ளிப் பாத்திரங்கள் சோபா, நாற்காலிகள். ஆனால், இல்லத்தில் நல்ல மனைவியில்லை எல்லாம் உண்டுதான்! மன அமைதியற்ற வாழ்வு. உறக்கமுமில்லை? அவனுக்கு எது இருக்கப் போகிறது? இவை இரண்டில் எது சிறந்தது? சொல்லுங்கள் வள்ளுவர் உள்ளம் இல்லாததில் சிறப்பும் உள்ளதில் குறைவும் காட்டுகிறது. அதுமட்டுமல்ல; ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்வழியும் காட்டுகிறது.


நடை போடும் உள்ளம்

"புகழ்புரிந்தஇல் இல்லோருக்கு இல்லை இகழ்வார்முன்
ஏறு போற் பீடு கடை”

என்பது மற்றொரு குறள்.

ஆண் சிங்கம்போல நடக்கச் சிலபேருக்கு முடியுமாம்: யாருக்கு? மாண்புடைய மனைவியைப் பெற்றவருக்கு ஆண் சிங்கம்போல் நடக்க முடியுமாம்! யார் முன்னால்? தன் சினேகிதன் முன்னாலா? அல்ல; தன்னை இகழ்பவன் முன் நடப்பான் என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய சிறப்பு! ஆனால், தன்னைத் தூற்றுகிறவர்முன் நல்ல மனைவியைப் பெறாதவனால் ஆண் சிங்கம்போல் நடக்க முடியாது என்று வள்ளுவர் வற்புறுத்திக் கூறிவிட்டார். குறளில் வள்ளுவர் உள்ளமும் ஒரு பெரு நடை நடப்பதைக் கண்டு மகிழுங்கள்.


தந்தை உள்ளம்

குழந்தையுள்ளவர்கள் அறிந்து கூறியிருப்பதுபோல் தந்தை உள்ளத்தைப்பற்றித் திருவள்ளுவர் கூறியிருப்பது வியப்பிற்குரியது. வள்ளுவருக்கு குழந்தைகள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும், அவர்,