பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-நன்மையும், அது - (அந்த அன்பும் அறமும் உடைத்தாயிருக்கின்ற) அச்செயலே. . - இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே. (பரி உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின் (நடவாமையின்) அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று. தெளிவுரை) பண்பு என்றால் இலக்கணம்: அஃதாவது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்கணம் அன்பும், அறமும் உடைமையே. இல்வாழ்க்கையின் பலனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்? முடியாது. அதனாலேயே அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்றார். யாவரிடமும் அன்பு காட்டுவதும், அறம் செய்வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பலனும் ஆகும் என்றார். இஃதென்ன'ஒன்றையே இலக்கணமாகவும், பலனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறுவிதமாக உரை பகர்வாராயினர். கூர்த்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று தருவோம். பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்றுதலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் 18 பேரா. சுந்தர சண்முகனார்