130 விட்டாலும் எல்லோராலும் மதிக்கக் கூடிய சிறப்பினைப் பெறுவான். செல்வம் பெற்றிருக்கின்ற ஒருவரை அவர் தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், கண்ட்ர், கண்பரல்லார் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருமே சிறப்புச் செய்வார்கள். இது உலகியல் வழக்கம். - ஆதலால்தான் பொருட் செல்வம் இல்லாதவர்கள், புறக்கணிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துணர்தல், வேண்டும். பொருட் செல்வம் உடையவர்களைக் கண்ட்ால் மற்றவர்கள் தம்மைத் தாழ்த்திக் கொண்டு செல்வமுடையவரை உயர்த்துவர். భ? இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு இக்குறட்பாவில் எள்ளுவர் என்ற கருத்தினைச் சிந்திக்க வேண்டும். பலராலும் இகழப்படும் நிலைக்குப் பொருளில்லாதவன் வந்து விடுவான். உலகில் செயல்படுகின்ற அனைத்திற்கும் பொருட் செல்வம் இருந்தாக வேண்டுமென்பது வெளிப்படையான கருத்தாகும். . அதனைப் பெற்றிராதவன் தனக்கும் மற்றவர்கட் கும் பயன்படாதவனேயாவான் எ ன் ப த ன ல் எல்லாரும் எள்ளுவர் என்று கூறினார். மற்றவர் களால் இகழப்படும் கிலைமையில் வாழ்தல் மனிதப் பிறவிக்கு இழிவானதாகும். எல்லா மக்களும் இகழ்ந்து பேசுவர் என்று கூறினார். .