பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 109 கவியரசர் முடியரசன்

கள்ளவிழ் மாலை சூடும் கலைஞரே தமிழர்நாட்டில் வள்ளுவர் கோட்டங் கண்டார் வான்புகழ் அவரைச் சாரும் உள்ளினர் இவ்வா றாக ஒதுக்கினர் கலைஞர் பேரை எள்ளினர் பழிகள் கூறி இகழ்ந்தனர் அறியா மாந்தர்.

பேரெடு தம்பி என்பார் பெரியவர்; எழுதி வைத்த பேரெடுக் கின்றார் இந்தப் பேதையர் வள்ளு வன்றன் பேரெடுத் தெறிந்து விட்டால் பெருமறை பிறர்க்கா சொந்தம்? ஆரெடுத் தெறிந்தா லென்ன அவர்புகழ் வளர்ந்தே தோன்றும்.

நாரெடுத் தெறிந்து விட்டால் நாண்மலர் மணமா போகும்? சேறெடுத் தெறிந்தால் வானிற் செங்கதிர் மறைந்தா போகும்? நீரெடுத் திறைத்தா லென்ன நிலமெலாங் கரைந்தா போகும்? பேரெடுத் தெறிந்து விட்டால் பேருண்மை மறைந்தா போகும்?