உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 113 கவியரசர் முடியரசன்

மற்றொரு மகனை நோக்கி மாந்தனை உனக்கோர் வேதம் பெற்றதும் உண்டோ?சொல்வாய்! பேரதும் உரைப்பாய் என்றேன், உற்றெனை உருத்து நோக்கி, 'உலகெலாம் உய்யும் மார்க்கம் தெற்றென உணர்த்தும் வேதம் திருக்குரான் எமதே என்றான்.

சிந்தனை முகத்தில் தேக்கிச் - சென்றிடும் பொழுதில் என்முன் வந்திடும் ஒருவற் கண்டேன்; வணங்கிய அவனை நோக்கிச் செந்தமிழ் மகனே நின்றன் சிர்மறை சொல்வாய் என்றேன்; 'விந்தைகள் மிகுந்து தோன்றும் விவிலியம் எமதே என்றான்.

உருக்கிடும் தமிழிற் சொன்ன ஒருமறை அறியா ராகி

  • அருத்தியில் தழுவிக் கொண்ட

அயலவர் மறையே சொன்னார், திருக்குறள் எங்கள் வாழ்க்கைத் திருமறை என்று கூற ஒருத்தரை இங்குக் காணேன் உய்யுமோ தமிழர் நாடு?

                                            20.7-1978.
  • அகுத்தி - விருப்பு