பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் உலகில்...

                    1. கடவுள்

உலகங்கள் ஏழென்பர்; இல்லை என்றே உரைப்பவர் இன்றுமுளர்; அதனால் இங்கு கலகங்கள் பலநிகழும்; எனினும் ஈண்டுக் கண்முன்னே பலவுலகங் காண்பதுண்டை கலையுலகம், திரையுலகம், எழுத்தில் வல்லா காணுலகம், பேச்சுலகம், வணிக வேந்தர் உலவுகிற தொழிலுலகம், கற்பனைக்குள் உதித்துவரும் உலகமெனப் பலவும் உண்

உள்ளமுறும் நினைவலைகள் வீசும் பாங்கில் உலகங்கள் பலதோன்றும்; அதுபோல் இ. வள்ளுவனார் ஒருலகம் படைத்துத் தந்தார்; வாய்மைநெறி பல கறி எனையழைத்தா, துள்ளிவரும் பெருமகிழ்வால் அவர்பின் சென்று தூயதொரு வாழ்வுதரும் உலகங் கண்டே தெள்ளுதமிழ்ப் புலவன்றன் உலகிற் கண்டு தெரிந்தவற்றுள் சிலவற்றை எடுத்துச் சொ

அப்புலவன் பேருலகில் கோவில் எங்கே அமைந்துளது? கண்டுகளி கொள்வோம் எ எப்புறமும் திரிந்தலைந்தும் காண வில்லை; எழிற்கோவில் நினைப்பவர்தம் மனமே என் செப்புகிற ஒலிகேட்டேன்; வியந்து நின்றேன் செம்பொருளின் திருவுருவங் காண எண்ணி அப்பெரியன் படைத்தளித்த உலக மெங்கும் அலைந்தபினும் ஒருருவுங் காண வில்லை