fË ள்ைளுணர் கிசால்லமுதம் தருமசேனருக்குக் கொடிய சூலைநோய் ஏற்பட்டது. அவர் நோயினை அகற்றச் சமணர் செய்த முயற்சி வீளுவிற்று. பிணித்துயர் தாங்காத நாவுக்கரசர் திருவதிகை வீசட்டானம் அடைந்து, அங்குப் பணி செய்து கொண்டிருந்த தமக்கையாரின் தாள்களில் விழுந்து பணிந்தார். திருவாளன் திருநீற்றைத் திலக் வதியார் நாவுக்கரசர்க்கு நல்கிஞர். அதனை அணிந்து, வீரட்டானத்தில் விளங்கும் பெருமான உளமுருகிப் பதிகம் பாடிசூர். சிவனது அருளால் சூலைநோய் நீங்கப் பெற்ருச். : தருமசேனர் மீண்டும் சைவம் புகுந்தார் என்ற செய்தியை அறிந்த சமணர்கள் தம் அரசளுகிய :கேந்திர பல்லவனிடம் சென்று முறையிட்டார்கள். அவள்மீது இல்லாத பொல்லாத பெரும் பழிகளைக் சுமத்தினர். பல்லவன், நாவுக்கரசரை வரவழைத்தான். தஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ணு மாறு ஏவிஞன். யானையைக் கொண்டு காலால் இடறுமாறு பணித்தான். ஏழு நாளனவும் நீற்றறையுள் அடைத்து வைத்தான். இறுதியில் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளு மாறு கட்டளையிட்டான். இங்கனம் பல கொடுமைகளை விளேத்தும் சிவனருள் பெருந்திறத்தால் நாவுக்கரசர் சிறிதும் நலிவடையாது பொலிவுற்று விளங்கிஞர். இதைக் கண்டு வியந்த பல்லவமன்னன், தான் அறிய து செய்த பிழைகளை உணர்ந்து நாவுக்காசரை வந்து பணித் தான். தமக்குப் பல துன்பங்களே வினைத்த பல்லவ மன்னன் அல்லவா இவன் ! என்று அவனைக் கடிந்து கொண்டாசோ நாவுக்கரசர் இல்லையில்லே அவனையும் அன்புடன் வரவேற்று அருள் செய்து சைவனுக்கினர். அவரன்ருே சினத்தைத் துறந்த சீாருளாளர் இந்த உண்மையை விளக்கப் போந்த சிவஞான முனிவர், பேல்லுைர்கோன் வத்து பணியக் கருணைசெய்தார் தொல்ன்நெறி வாகீசர் சோமேசன்-கொல்ல'