பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வள்ளுனர் சொல்ல்முதம் துன்பமே அன்றி இழிவையும் தொடர்ந்து தரும் வறுமையால் வாடுவோன் நாள்தோறும் செத்துப் பிறப் பது போன்று சிந்தைநொந்து வருந்துகின்ருன். நேற்று வாட்டிய நீள்பசியைப் போக்கப் பெருந்துயருழந்தான் ஒருவன் ஒருவாறு பசியை ஒழித்து நாளைக் கழித்துவிட் டான். மறுநாள் பொழுது புலர்ந்து விட்டது. ஐயோ ! நேற்றுக் கொன்றது போன்று கொடுந்துன்பம் விளைத்த வறுமை இன்றும் வந்துவிட்டதே! என் செய்வேன் 1: என்று கதறிஞன். - 'இன்றும் வருவது கொல்லோ நெருதலும் கொன்றது போலும் நிரப்பு' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். வறிஞனுக்குச் சிறிதும் உறக்கம் வராது. ஒருவன் மந்திர வல்லமையாலோ மருந்தின் துணையாலோ தெருப்பிலும் படுத்துறங்க முடியும். ஆளுல், வறுமை புற்ற நாளில் எத்த வகையாலும் சிறிதும் துயில் கொள்ள இயலாது என்பர் வள்ளுவர். இத்தகைய வறுமையுற்ருேம் பாது செய்தல் வேண்டும் எல்லாப் பற்றுகளையும் விட்டு முற்றத் துறத்தலே உற்ற வழி யாகும். அது செய்யாதிருத்தால் பிறர் இல்லங்களில் உள்ள உப்பிற்குக் காடிக்கும் வறிஞன் எமனுவான் என்று குறித்தார் வள்ளுவர். நல்குரவால் பெருகும் கொடும் பசியைச் சீத்தலைச் சாத்தளுர் பசிப் பணி என்னும் பாவி என்று குறிப் பிட்டார். இப் பாவி ஒருவனைப் பற்றுமாயின் அவனது குடிப்பிறப்பு, விழுப்பம், கல்வி, அறிவு, நாணம், ඵ්ද්pල් முதலிய எல்லா தலங்களும் அழியும் என்று அறிவுறுத் திஞர். -