பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் சொல்லமுதம் யுள்ளார். கற்றவர் நிரம்பிய பேரவைக்கண் மற்றவர் மிதிக்கும் மாண்புடையவகை ஆக்கிவைக்க வேண் டுவதே தங்தை மகற்கு ஆற்றும் நன்றி என்று அரு வளிச்செய்தார் பெருநாவலர். அத்தகைய நன்மை யைச் செய்த கங்தைக்கு மகன் செய்யவேண்டிய கைம்மாறும் ஒன்றுண்டு. அதனே, இங்கன்மகனைப் பெறுதற்கு இவன் தந்தை முந்தைகாளில் என்ன தவம் செய்தானே! என்று கண்டவர் கேட்டவர் எல் லாரும் வியந்து நயந்து போற்றுமாறு சான்றேனுக விளங்கவேண்டும் என்று குறித்தார் அப்புலவர். - ஒருவனுக்கு உடம்பையும் உயிரையும் உலக வாழ் வையும் உருவாக்கி உதவும் பெருமை அவனது பெற். ருேர்க்கு உரியது. அப்பெற்ருேர்க்கு மக்களாவார் செய்யத்தக்க கைம்மாறும் உள்ளதோ ! என்று கேட்பார் வேதநாயகர். சின்னவோர் பொருள்தத் தோரைச் சிவனுள் ளளவும் உள்ளத்(து) உன்னவே வேண்டும் என்ன உரைத்தனர் பெரியோர் தேகம் தன்னையா ருயிரைச் சீரசர் தரணியின் வாழ்வைத் தந்த அன்னைதந் தையர்க்குச் செய்யும் அருங்கைம்மா றுளதோ அம்மா! என்பது வேதநாயகரின் நீதிநூற் பாடல். பழந்தமிழ்ப் புலவர்கள் அனைவரும் செய்ங்கன்றி மறவாத சீரிய பண்பினர். அவர்கள் தம்மை ஆத ரித்த வள்ளற் பெருமக்களைத் தெள்ளிய தீஞ்சுவைப் பாக்களால் பாடிப்பாடி கன்றி பாராட்டினர்; அவ். வள்ளல்களின் புகழை வையமெங்கும் பரப்பி மகி ழ்க்