பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ア நன்றியும் நடுவும் 器? தனர். அப் புலவர் பெருமக்களின் நன்றியுணர்ச்சி யால் தோன்றிய பாக்களின் கோவைகளே பழங் தமிழ் நூல்கள். பிற்காலத்தும் கவியரசராகிய கம்பர் தம்மை ஆதரித்துக் காத்த வெண்ணெய் கல்லூர்ச் சடையப்ப வள்ளலின் சிறப்பைத் தம் காவியமாகிய இராமாயணத்தில் ஆயிரம் பாக்களுக்கு ஒருமுறை விருப்புடன் குறிப்பிடுகின்ருரன்ருே அவரே கமது காவியத்தில் நன்றி மறத்தலாகிய பாவத்தின் கொடு மையை நன்கு குறிப்பிடுகின்றர். தாய், தந்தை, ஆசிரியன், அந்தணுளர், பசு, பாலர், பத்தினிப் பெண்டிர் ஆகிய இவரையெல்லாம் கொன்ருர்க்கும் கழுவாயுண்டு. ஆனல் ஒருவன் செய்த நன்றி கொன்றவனுக்கு அப்பாவத்தை ஒழிக்கும் உபாயமே இன்முகும் என்று குறிக்கின்ருர், சிதைவகல் காதல் தாயைத் தந்தையைக் குருவைத் தெய்வப் பதவியந் தணரை ஆவைப் பால ரைய பாவை மாரை வதைபுரி குநர்க்கு முண்டாம் மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் ருர்க்குஎன் றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ ? என்பது கம்பாது வாக்கு. பசியால் மெலிந்து நடையால் தளர்ந்து சென்ற தமிழ்மூதாட்டியார்க்குக் கல்வியறிவு கடுகளவும் பெருத ஆயர் குலச்சிறுவன் ஒருவன், தனக்கு வைத் திருந்த கூழைத் தந்து அவரது பசித்தீப் பற்றிய வயிற்றைக் குளிர்வித்தான். உடனே, அச்சிறுவன் காலத்தால் செய்த நன்றியைப் பாராட்டிக் கன்னித்