பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் திண்மையும் 53 தாமரைப் பொய்கையைப்போல் தண்மையுடைய தாகும் என்று பெண்மை இயல்பொன்றை விளக் கினர் அப்பெருந்தேவியார். அவரது கற்புத் திண் மையினக் காட்டும் பாட்டைப் படித்துப் பாருங்கள்

பல்சான்றிரே பல்சான் றிரே

செல்கெனச் சொல்லா(து) ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றிரே அணில்வரிக் கொடுங்காங் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் திண்டா(து) அடைவிடைக் கிடந்த கைவிழி பிண்டம் வெள்னெட் சாந்தொடு புனிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரந்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவல் பெண்டிரே மன்லேம் மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு) சமம் துமக்கசி தாகுக தில்ல எமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை தள்ளிரும் பொய்கையும் தீயுமோ Jo2.jp.” பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் சென்று கண்ணகி வழக்குரைத்தாள். கோவலன் கள்வனல்லன்; பொற்கொல்லன் சொல்லேக் கேட்ட தானே பொல்லாத கள்வன் என்பதை அவன் உணர்ந்தான். மன்பத்ை காக்கும் தென்புலக் காவல் என்முதல் பிழைத்துவிட்டதே! என் வாழ் நாள் இன்ருேடு முடிவதாக என்று சொல்லி அரி பணேயில் சாய்ந்த வண்ணமே மாய்ந்தொழிந்தான். அவன் இறந்ததைத் தெரிந்த கோப்பெருந்தேவி உடனே கோவென அலறி உயிர்நீத்தாள். அவள் தலைக்கற்புக்குத் தக்க எடுத்துக்காட்டாவாள். கன வனே இழந்ததும் நெருப்பில் வீழ்ந்து இறப்பதாகிய