பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வணங்கிய கடவுள் 7I

பார்த்துப் பார்த்து, மனம் பரவசப் பட்டுப் பட் டு போற்றியும் புகழ்ந்தும், வந்தித்தும், வணங்கியும், வழிபட்டும் துதி செய்யும் பேறு, எதிரே இருப்பதால் தான் முடிகிறது. -

தேடி யலைந்தாலும் தரிசிக்க முடியாத தெய்வத்திற்கு இவை யெல்லாம் செய்ய இயலாத தல்லவா! அதனால் தான் இந்த ஆன்ற சொல்லான, பொருள் பொதிந்த பெருமைமிக்க சொல் லான, தொழுதல் என்று பயன்படுத்தினார்.

ஆகவே, கற்றதனால் மேற் கொள்ளும் முயற்சி என்னவெனில், தனது பெயரையும் புழையும் நிலை நாட்டி, இந்தப் பேருலகில் என்றென்றும் வாழ்வதற்கு வழிகாட்டி, உபதேசித்து உதவுகின்ற குருவின் அரிய ஆற்றல்களை, முயற்சிகளை, மனதில் ஏற்று, அவரது சீர் மிகுந்த திருவடிகளைத் தொழுது, வணங் குதல் வேண்டும் என்கிறார்.

கற்றதன் முடிவு, சில சமயங்களில், தான் நான் என்ற தற்பெருமையும் தற்போதமும் நிறைந்த தலைக் கனத்தையும் உண்டு பண்ணிவிடும். அதனால், பலர் கல் விமான்களாக இருந்த போதிலும் குணக் கேடர்களாக, மதி கேடர்களாக வாழ்வதுண்டு. சிந்திப்பதுண்டு. செயல்படுவதுண்டு.

மற்றவரை மதிக் காத பண்பை வளர்த்துக் கொண்டு, மித மிஞ் சிய செருக் கால் , சீரழிந்து

போவதும் உண்டு.

அதனால் தான், கல்வி கற்றதன் பயன், பணிவோடு இருப்பது. பெரியவர்களை மதிப்பது. அவர்கள் தாள் பற்றி நடந்து, தன்னை வளர்த்துக்