பக்கம்:வழிகாட்டி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திருதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுவில் கற்பின் வாள்துதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன், மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதிச்

10

15

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/190&oldid=643928" இலிருந்து மீள்விக்கப்பட்டது