இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2O6 வழிகாட்டி
யாகத் தரிசித்து, குறைவில்லாமல் பெருகிய ஆர்வத் தோடு அழகையுடைய திருமுருகாற்றுப்படையை பூசை யாக எண்ணிக்கொண்டு பாராயணம் செய்வாயாக. (9)
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தக்கோல நாடோறும் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தாம்நினைத்த எல்லாந் தரும். நக்கீரர் திருவாய்மலர்ந்த நல்ல திருமுருகாற்றுப் படையைத் தம்மைப் பாதுகாக்கும் பொருட்டுத் தினந் தோறும் ஒருவன் பாராயணம் செய்தால், பெருமை யுடைய முருகக்கடவுள் முன்னாலே பாதுகாக்க எழுந்தருளி வந்து உள்ளத் துயரத்தைப் போக்கியருளி, அவர்கள் கருதிய எல்லாவற்றையும் வழங்கியருள்வான்.
(10)