உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி தாம்பாளமும், விதவிதமான வட்டில்களும், பன்னீர்ச் செம்பும் இருக்கும்; பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறுகடை அளவுக்கு இருக்கும். மருந்து வகை கள் சிறு வைத்திய சாலை அளவுக்கு இருக்கும் அப்படிப் பட்ட வசதியுள்ள வீடுகளிலேயுங்கூட, புத்தகசாலை இராது; இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை! அவசியமும் தோன்றுவது இல்லை. ய "இந்தச் செப்புக்குடம் சீரங்கத்தில் வாங்கியது. தேவா கல்யாணத்தின்போது திருப்பதியில் வாங்கினோம். இந்தத் தாம்பாளத்தைப் பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க, அப்போது வாங்கினோம். இந்த இரத்தின ஜமக்காளத்தைக் கார்த்திகை தீபத்தின் போது திரு வண்ணாமலையில் வாங்கினோம். சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது இதை வாங்கினோம்" என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ் வொன்றுக்கும் ஒரு சரித்திரமே கூறுவார்கள். ஆனால், பத்து நல்ல புத்தகங்களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று கூறமாட்டார்கள். வீட்டில் அலங்காரத்தையும் விசேஷகால உபயோகத்திற் கான சாதனங்களையும் கவனிப்பது போல, வீட்டிற்கோர் புத்தகசாலை, சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாகக் கவனம் செலுத்த வேண்டும். அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாக்கிவிட்ட நாட்களிலே வாழும் நாம், இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது, நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகமாகும். வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கை யில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போக போக்கியப் 159