பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வழுவிலா மணிவாசகர் கூறினன். எனவே எனக்குத் தெரியாமலே எங்கேங்கோ என்னல் ஆற்றவேண்டிய பல பணிகள் காத்திருக்கும். பிறந்தது முதல் இதுவரை உங்களோடு-உங்கள் நாட்டில் இருந்தேன். இனி எனக்கு யாதும் ஊர்யாவரும் கேளிர்; தீதும் நன்றும் என்னைத் தீண்டா: ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவது என்ப்தே என் எண்ணம். எனவே என்னை விட்டு விடுங்கள். நான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் காட்டிய வழியே சென்று அன்பர் பணி செய்கின்றேன். நீங்கள் உங்கள் கடமை களை வழுவாது செய்து சொக்கேசர் அருளுக்குப் பாத்திரமாகுங்கள். கடவுளை விட்டு நீங்கள் நெடுந்துாரம் செல்ல நினைத்தாலும் அவர் உங்களை அணைத்துக் கொள்வார். இதோ எங்கோ சென்ற நீங்கள் இன்று அவன்முன் நிற்கின்றீர்கள். இது என்றென்றும் உண்மையாகும் நியதி. உங்கள் பணி சிறப்பதாக! நான் சென்று வருகின்றேன். (மூவரும்-மற்றுமுள்ள பலரும் கண்ணிர் சிந்த மணிவாசகர் மெல்ல அடி எடுத்துப் புறம் போகின்ருர். அவர் வாய் அமைதியாகப் பாடுகின்றது.) 女