பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 வழுவிலா மணிவாசகர் அந்தணுளர் பலர். அவருள் சைவ உலகம் நால்வரையும் வைணவ உலகம் பன்னிருவரையும் பாராட்டிப் போற்றுகின்றன. சைவ சமயக் குரவர் நால்வருள் சிறந்தவராகப் போற்றப்படுகின்றவர் மாணிக்கவாசகர். மாணிக்கவாசகர் திருவாசகப் பாடல்கள் உள்ளத்தை உருக்குவன: சைவர்களை மட்டுமின்றிப் பிற சமயம் சார்ந்த வர்களையும்கூட அப் பாடல்கள் பின்னிப் பிணைக்கின்றன். கிறித்தவ சமயம் வளர்க்க ஆங்கில நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்த போப்' (Pope) பாதிரியார் திருவாசகத்தில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார்; திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். எனவே திருவாசகம் சமயங் கடந்து உள்ளம் கொள்ளைகொள்ளும் தெய்வ நூலாக அமைந்து விட்டது. திருவாசகத்தைப் படித்துப் படித்துத் தம்மை மறந்த அடியவர் பலர். அவருள் சிவப்பிரகாசர் ஒருவர். அவர் தம் நான்மணி மாலையில் திருவாசகத்தின் உளந்தொடும் தன்மையை வியந்து வியந்து, 'திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள் தொடுமண்ற் கேணியில் சுரந்துநீர் பாய மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்பராகுநரன்றி - மன்பதை உலகில் மற்றையோர் இலரே” என்று பார்ாட்டித் திருவாசகம் உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கவல்லது எனக் காட்டுகின்றனர். அண்மையில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் அவரினும் ஒருபடி மேலே சென்று, மக்கள் மட்டுமன்றிப் பிற எல்லா உயிரினங்களுமே திருவாசகத்தில் தம்மை மறக்கும் எனக் காட்டுவர். வாட்டமிலா மர்ணிக்க வாசகநின்,வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்