பக்கம்:வழுவிலா மணிவாசகர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை உலகம் தோன்றிய நாள்தொட்டு எத்தனையோ அறிஞர்களும் அறவோர்களும், சமயத் தலைவர்களும் பிற நல்லவர்களும் தோன்றி உலகை உய்விக்கப் பல்வேறு வகை களில் பாடுபட்டு வருகிருர்கள். வரலாற்றுக்குமுற்பட்டகாலம் போக, வரலாற்று எல்லையில் நின்றே ஆராயுங்கால் நம்முன் காட்சியளிக்கும் நல்லவர் பலர். அவர்கள் பல்வேறு நாடுகளில் தோன்றிப் பல்வேறு மொழிகளைப் பேசி, பல்வேறு சமயங்களையும் கொள்கைகளையும் வகுத்தும் வளர்த்தும் பின் வரும் மக்களினம் வாழ வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். அவர்தம் பருஉடல் மறைந்தாலும் அவர்தம் அருள் நலம் சான்ற நுண்ணுடல் இன்னும் உலகில் நம்முடன் நமக்காக வாழ்கின்றது-அவர்கள் எழுதி வைத்த உணர்வு கலந்த உள்ளொளி பெருக்கும் நல்லெழுத்துக்கள் இன்றும் வாழ் கின்றன. அவர்தம் எழுத்துக்களே மனித சமுதாயத்தை உய்விக்கும் ஊன்றுகோல். தமிழ்நாட்டு வரலாற்றில் சமயம் முக்கிய இடம் பெற் றுள்ளது. சங்ககாலத்துக்கு முன் தொடங்கி இன்றுவரை நாட்டில், ஒருசில நூற்ருண்டுகள் தவிர்த்து, சைவம் வைணவம் என்ற இருபெரு சமயங்களுமே ஆட்சி செலுத்து கின்றன. இரு சமயங்களிலும் தோன்றிச் சமய நெறியையும் தமிழையும் ஒன்றி வளர்த்த செந்தண்மை பூண்டொழுகிய