பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க இளம்பரிதி கடற்பரப்பில் உப்பங் கழிப்பரப்பில் தாழை மடற்பரப்பில் நெய்தல் மணற்பரப்பில் சாய்ந்த முடப்புன்னேப் பைங்கிளேயில் முண்டகப்பூங் காட்டில் அடங்கி யிருந்த இருள் அற்ருெழியக் கீழ்க்கடல் மேல் தங்கப் பரிதி தலைநிமிர்ந்தான் ; வாழியவே ! - 5 எங்குமே இன்பம் இளம்பரிதி வாழியவே ! - - வானில் மலேயில் மரக்காவில் பூம்புதரில் போனஒளி, அடடா! பொன்வெள்ளம்! பொன்வெள்ளம்! ஆசை மனேயாட்டி அன்பே இதைக்கேள் ! . . . . . -- - --- மூசையிலே வைத்தெடுத்த பொன்னே முளேத்தகதிர் ! 10 நீர்நிலம்கால் விண்ணே நிலத்த பொருளேயெல்லாம். - ஆட்டிப் படைப்பதுவும் ஆக்கம் விளேப்பதுவும் வானம் முளைத்து வரும்பரிதி செய்கையடி ! : நானிலத்தில் பொய்கை நறும்பூவில் வான்முகட்டில் ஊனில் உடலில் உயிர்ப்பில் ஒளிவீசி 15 வானும் எழுச்சியினைச் செய்ததடி வாழ்ககதிர் ! இன்னும்கேள் : பெண்ணரசே ஏரி குளம்குட்டை வற்றி வெடித்து மரக்கிளேகள் பட்டுவரச் சுற்றிப் படர்ந்தகொடி தோப்பும் கலகலக்க நன்செய பொலிவிழக்க நல்லாறு நீர்வற்றப் 20 புன்செய் இரைத்துழவின் நாளெல்லாம் போர்ாட வானம் அனல்சொரியும் மண்ணும் கனல்எழுப்பும் !