பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T5 வான்மறந்து விண்மீன்கள் வேறெங்கே செல்லும் ? மலர்விட்டுக் கருவண்டு மதுவெங்கே தேடும் ? மீன்கூட்டம் நீர்நிலையைப் பிரிந்திருப்ப துண்டோ ? வெற்பிழிந்து தவழ்ந்துவரும் மெல்லருவி தாவித் தான்கலக்கும் கடலன்றி வேறெங்கே செல்லும் ? தமிழ்ச்சுவையே ! உனே மறக்க ஒருபோதும் ஆகா ! மான்விழியைத் திருப்பாது வேறெங்கோ நோக்கி என்னுயிரை வாங்குகின்ற காரணங்தான் என்னே ? 4